கீவ்: உக்ரைனின் கிரெமன்சுக் நகரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய அதிபர் புதின் ஒரு பயங்கரவாதி என ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது அங்காடி மீது ரஷ்யா குண்டு வீசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ரஷ்ய போர் விமானங்கள் பல்பொருள் அங்காடி மீது குண்டு வீசியதால் அதை பயங்கரவாத நாடக அறிவிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மன்றத்தில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே மத்திய உக்ரைனில் பல்பொருள் அங்காடி மீது ரஷ்யா குண்டுவீசி தாக்கியதில் ஏராளமானோரை காணவில்லை என புகார் எழுந்துள்ளது.