சென்னை: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பணியாற்றி ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு, பணிக்கொடை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை, தலைமை செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற 70 கோயில் பணியாளர்கள் மற்றும் மறைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிக்கொடை ரூ.2,70,09,752-க்கான காசோலையை நேற்று வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தர மோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.