ஓய்வூதியதாரர்கள் நேரில் ஆஜராகாமல் மின்னணு மூலம் நேர்காணல்: கலெக்டர் தகவல்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர்அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு:ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் நேரில் ஆஜராக வேண்டும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நேரில் ஆஜராக இயலாத நிலையில் தற்போது ஜீவன்பிரமான் மின்னணு இணையதளம் மூலமாகவும் வாழ்நாள் சான்றிதழ் மூலமாகவும் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. மின்னணு முறை தவிர்த்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவும் வாழ்நாள் சான்று வழங்கும் நடைமுறையும் உள்ளது. எனினும் நேர்காணல் மின்னணு மூலம் செய்யலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: