சென்னை: மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 30ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
அத்துடன், குமரிக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசும். அதனால் அந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.