ஒருங்கிணைந்த சார்நிலை பதவிகளுக்கு 2ம் கட்ட சான்று சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: ஒருங்கிணைந்த சார்நிலை பதவிகளுக்கான 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு மூலச்சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பு:

ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை(வேலை நாட்களில்) தங்களது மூலச்சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இசேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு பணிகளில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என கருதி மேற்கண்ட பதவிக்கு அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: