ஜெர்மனி: ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றுள்ளார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 48வது ஜி7 மாநாடு ஜெர்மனியில் நடைபெறுகிறது. இதில், ‘சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும்’ என, ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி வந்தார். முனிச்சி விமான நிலையத்தில் அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி காவேரியின் குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்தி பிரதமர் மோடியை வரவேற்றனர். இதனை மோடி ரசித்து பார்த்தார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி முனிச்சி விமான நிலையத்துக்கு வெளியே இந்தியர்கள் காத்திருந்து வரவேற்பு அளித்தனர். தேசிய கொடியை ஏந்தி அவர்கள் பிரதமருக்கு உற்சாகமாக வரவேற்றனர்.