புறநகரில் பலத்த காற்றுடன் மழை மின் கம்பங்கள் உடைந்தது

திருவொற்றியூர்: புறநகரில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மின் கம்பி அறுந்து விழுந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்கிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் சில மணி நேரம் பலத்த காற்றுடன்     மழை பெய்தது. இதனால், மாதவரம் பகுதிகளில் வீடுகள் மற்றும் சாலையோரம் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மணலி மண்டலம் 19வது வார்டுக்குட்பட்ட காமராஜர் சாலை, மாத்தூரில் வீடுகளுக்கு செல்லும் மின் வயர் நள்ளிரவில் அறுந்து கீழே விழுந்தது. அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக மாத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், மின் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மின் வயர்களை சரி செய்தனர்.

இதேபோல், புழல் கன்னடபாளையம் திருவிக தெருவில் ஒரு மின் கம்பம் உடைந்து விழுந்தது. ஜீவா முதல் தெருவிலும் ஒரு மின்சார கம்பம் உடைந்தது. இதனால், அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.  இரவு நேரத்தில் மின் கம்பங்கள் விழுந்ததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.  

இதுகுறித்து கிரான்ட் லைன் மின்வாரியத்துக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், நேற்று மதியம் 12 மணி வரை மின் தடை இருந்தது. மின் வாரிய  அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட இரு கம்பங்களையும் அகற்றி விட்டு புதிய மின் கம்பத்தை நட்டனர்.  மீண்டும் வழக்கம்போல் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது.

Related Stories: