ராமேஸ்வரம்: புதுச்சேரி, காரைக்கால் - இலங்கை காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு இடையே சரக்கு படகு போக்குவரத்து துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இலங்கை மீன்பிடித்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘‘‘தமிழகத்தின் காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு சரக்கு படகு போக்குவரத்து துவங்கப்பட உள்ளது. இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் தேவையான அளவிற்கு கொண்டுவர முடியும்.