சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி, அத்தியூர்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்(38). விவசாயியான இவர் தனது டிராக்டரில் கடம்பூரிலிருந்து சத்தியமங்கலம் செல்வதற்காக கடம்பூர் மலைப்பாதை வழியாக கே.என்.பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.டிராக்டரின் பின்புறம் பாரம் ஏற்றுவதற்காக ட்ரெய்லர் பொருத்தப்பட்டிருந்தது. ஊத்துக்குழி பாறை அருகே சென்ற போது திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து சுமார் 30 அடி ஆழத்தில் உருண்டு சென்றது.