சின்னாளபட்டி: சின்னாளப்பட்டி அருகே சிறுமலை அடிவாரப் பகுதியில் கனகாம்பரம் பூக்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆத்தூர் ஒன்றியம், சின்னாளப்பட்டியை அடுத்த பெருமாள்கோவில்பட்டி, ஜாதிகவுண்டன்பட்டி, அமலிநகர், ரெங்கசாமிபுரம், ஜெ.ஊத்துப்பட்டி,காமலாபுரம், முருகம்பட்டி, நடுப்பட்டி ஆகிய கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் தற்போது கனகாம்பர பூக்களை பயிரிட்டு இருந்தனர். தற்போது, அவை நன்கு விளைச்சல் அடைந்து செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றனர். தினசரி, அதிகாலை நேரங்களிலும், மாலை நேரங்களிலும் கனகாம்பரம் பூக்கள் பறிக்கப்பட்டு லாரிகள் மூலம் சென்னை, கோவை, திருச்சி, கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றன. தற்போது, பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது.