சென்னை: பசுமை வழிச்சாலையில் உள்ள இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் 225 பேர் தங்கி பயில சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக மாணவர்கள் எங்கு பயிற்சி பெற்று முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு 225 பேர் தங்கி பயில சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் இன்று மாலை 6 மணி முதல் 27ம் தேதி மாலை 6 மணி வரையில் www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.இடஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட தேர்வர்கள் விவரம் 28ம் தேதி மாலை 6 மணியளவில் இணையத்தில் வெளியிடப்பட்டு, 29ம் தேதி மற்றும் 30ம் தேதி ஆகிய இரு நாட்களில் சேர்க்கை நடைபெறுவதோடு ஜூலை 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.