சென்னை பிராட்வே நடைபாதைகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்காதவாறு நடவடிக்கை தேவை: மாநகராட்சிக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: சென்னை பிராட்வே பகுதி நடைபாதைகளில் இருந்து அகற்றிய ஆக்கிரமிப்புகள் மீண்டும் ஏற்படாதவாறு சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சோதனை நடத்தி சிசிடிவி பதிவுகளுடன் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்தது தொடர்பாக டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். திங்கள் முதல் ஞாயிறு வரையிலான சிசிடிவி காட்சிகள், சோதனை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டது.

Related Stories: