காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதில், விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறியுள்ளார்.இது குறித்து கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாதாந்திர விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 24.06.2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் மாவட்ட வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் பிரதான் மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தில் இணைய வழி பதிவுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.