பொன்னமராவதி ஒன்றியத்தில் 100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கல்

பொன்னமராவதி : பொன்னமராவதி ஒன்றியத்தில் 100பயனாளிகளுக்கு 17.5லட்சம் மதிப்பிலான இலவச ஆடுகள் வழங்கப்பட்டது.இலுப்பூர் கால்நடை உதவி இயக்குனர் பாண்டி தலைமையில் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர்களுக்கு கால்நடைத்துறை மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் அவர்களுக்கு ஆடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பொன்னமராவதி ஒன்றியத்தில் முதற்கட்டமாக செம்பூதி மற்றும் காரையூர்ஆகிய இடங்களில் ரூ 17.500 மதிப்பிலான தலா 5ஆடுகள் என ரூ 17.5லட்சம் மதிப்பில்100பயனாளிகளுக்கு இலுப்பூர் கால்நடை உதவி இயக்குனர் பாண்டி வழங்கினார். இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் வேந்தன்பட்டி சண்முகநாதன்,செம்பூதி பிரேம்குமார் காரையூர் அருள்வேந்தர் மற்றும் கால்நடை மருத்துவர்கள், ஊராட்சித்தலைவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: