சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மர்ம நபர் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு காலை தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் ஆகியவற்றுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். ரயில்வே போலீசார் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ரயில்வே பிளாட்பாம், தண்டவாளம் உள்ளிட்ட தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.