திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் இதுவரை 208 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது: அமைச்சர் சேகர்பாபு

சென்னை:தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் இதுவரை 208 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். புராதன, தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து குடமுழுக்கு நடந்த முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். கடந்த ஆண்டு மே 7 முதல் இந்த ஆண்டு ஜூன் 17 வரை உள்ள காலத்தில் 208 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்றும் வரும் ஜூன் 23 முதல் ஜூலை 31 வரை உள்ள காலத்தில் மேலும் 30 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார் 

Related Stories: