நீலகிரி: ஆவின் பொருட்களில் எந்தவித வேதிப் பொருட்களும் கலப்படம் செய்வதில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்திருக்கிறார். உதகையில் ஆவின் நிறுவனத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சா.மு.நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியை அதிகரிக்க, விற்பனையை அதிகப்படுத்த புதிய உயர் தொழில்நுட்ப பாலகங்கள் தொடங்கப்பட்டு வருவதாக கூறினார். ஆவின் தயாரிப்பு பொருட்களுடன் எந்தவித தனியார் நிறுவனங்களும் போட்டி போட முடியாது. ஆவின் பொருட்களின் தரமும், சரியான விலையும் உள்ளதால் சந்தையில் தனி பெயர் உள்ளது.