பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது பாராட்டுகள். தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர் மனம் தளராமல், அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும், அனைவரின் எதிர்காலம் சிறக்கவும் நல்வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: