ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஓசூர் பகுதியில் பெய்த மழையால் மாநகராட்சிக்கு உட்பட்ட மூக்கண்டப்பள்ளி ஏரி நிரம்பி, உபரிநீர் கால்வாய் மூலம் பேடரப்பள்ளி ஏரிக்கு செல்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு காமராஜர் நகர் மற்றும் சாந்தபுரம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் 2 அடி அளவுக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் மூக்கண்டப்பள்ளி ஏரி, பேடர்பள்ளி ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் பல தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.