திருவில்லிபுத்தூர் : நோயின்றி ஆரோக்கியமாக வாழ அனைவரும் யோகா செய்யவேண்டும். இதுவரை யோகா பயிற்சி எடுக்காதவர்கள் கூட, நாளை சர்வதேச யோகா தினத்தில் இருந்து பயிற்சியைத் துவக்கவேண்டும் என பெண் யோகா பயிற்சியாளர் வலியுறுத்தியுள்ளார்.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ரெங்கநாதபுரம் தெருவைச் சேர்ந்தவர் பூமதி (42). சிறு வயது முதலே யோகா ஆர்வம் உள்ள இவர், யோகாவில் முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். யோகா கலையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேடி வருபவர்களுக்கு இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கிறார். பூமதி கூறுகையில், ‘‘பணம் உள்ளவன் லட்சாதிபதி.