மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 28ம் தேதிக்கு மாற்றம்

சென்னை: மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜூன் 25ம் தேதி பதிலாக ஜூன் 28ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என அரசு வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து, தமிழக சட்டமன்றக் கட்சிகள் அடங்கிய குழு, புதுடில்லிக்குச் சென்று, ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து, அரசின் நிலையை எடுத்துக் கூற இருப்பதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கின்றார். அந்தக் குழுவில் நானும் பங்கேற்க வேண்டும் என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டார். எனவே, அக்கூட்டத்தில் நானும்பங்கேற்கிறேன். உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம்25ம் தேதிக்கு பதில் 28ம் தேதி 10 மணிக்கு தாயகத்தில் கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் நடைபெறும் என வைகோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: