சென்னை: அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி.வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்றும், வகுப்புகளை நடத்த தகுதிவாய்ந்த சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் 2,381 அங்கன்வாடி கட்டடங்களில் எல்.கே.ஜி.,யூ.கே.ஜி. வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.