பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் பூந்தமல்லி, திருவேற்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். இதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, ஆதரவற்ற விதவை சான்றிதழ், இலவச வீட்டுமனை பட்டா என மொத்தம் 920 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 248 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், 672 மனுக்கள்மீது ஆய்வு செய்யப்பட்டு உரிய தீர்வு காணும் பணி நடைபெறுகிறது.