வரும் 25ம் தேதி மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர்கள் கூட்டம்  வருகிற 25ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், மதிமுகவை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும், நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மேலும், ஒன்றிய அரசின்  தவறான செயல்பாடுகளை பொதுமக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: