சென்னை: மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர்கள் கூட்டம் வருகிற 25ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.