சென்னை: சென் னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குனராக கிர்லோஷ்குமார் ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண் இயக்குனராக விஜயராஜ் குமார் பதவி வகித்து வந்தார். தற்போது அவர் மாற்றப்பட்டு தொழிலாளர் நலத்துறை செயலாளராக பதவி வகித்து வந்த கிர்லோஷ் குமார் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண் இயக்குனராக பொறுப்பேற்றார்.