செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், சிங்கப்பெருமாள் கோயில் ஊராட்சியில் 12 அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. செங்கல்பட்டு எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ30 லட்சம் மதிப்பீட்டில் இந்த பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே.பி.ராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் விஜயலஷ்மி துரைபாபு, காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் நாகம்மாள் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினராக வரலஷ்மி மதுசூதனன் எம்எல்ஏ கலந்துக்கொண்டு, அப்பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகளை வழங்கினார்.