கேரளாவுக்கு சென்று பெற்றோரிடம் ஆசி வாங்கிய நயன்தாரா

திருவனந்தபுரம்: காதல் ஜோடிகளாக பல வருடம் வலம் வந்து கொண்டிருந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் வெகுவிமரிசையாக நடந்தது. இதில் திரைபிரபலங்கள் பலர் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.நயன்தாராவின் பெற்றோர் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாக அவர்கள் 2 பேரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் பெற்றோரிடம் ஆசி பெறுவதற்காக நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி சென்னையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர். பின்னர் பெற்றோரை சந்தித்து 2 பேரும் ஆசி வாங்கினர். சில நாட்கள் 2 பேரும் கேரளாவில் தங்கியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது

Related Stories: