திருவனந்தபுரம்: காதல் ஜோடிகளாக பல வருடம் வலம் வந்து கொண்டிருந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் வெகுவிமரிசையாக நடந்தது. இதில் திரைபிரபலங்கள் பலர் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நயன்தாராவின் பெற்றோர் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வருகின்றனர்.