திருமலை: ஒடிசா மாநிலம் சின்னப்பள்ளியில் இருந்து ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் வழியாக விஜயவாடா நோக்கி தனியார் ஆம்னி பஸ் பயணிகளுடன் இன்று காலை வந்தது. எடுகுரல்லப்பள்ளி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையிலேயே கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஒடிசாவை சேர்ந்த தனேஷ்வர்தலபதி (24), ஜீது (5), சுனேனா (2) உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.