சென்னை: புதிய கல்வியாண்டு மாணவர்களுக்கு எல்லையில்லா அறிவை பெறும் ஆண்டாக அமையட்டும் என்று அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், புதிய வகுப்புகளுக்கு மாணவச் செல்வங்கள் திரும்புகின்றனர். அவர்கள் அனைவருக்கும் புதிய 2023வது கல்வியாண்டு சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.