ஆலங்காயம்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சங்கராபுரத்தை ஒட்டிய பாலாறு பகுதியில், நேற்று முன்தினம் மாலை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, பாலாற்று மணலில் பெருமாள் மற்றும் அதனுடன் 2 அம்மன் சிலைகள் மணலில் புதைந்திருந்ததை கண்டு மணலை அகற்றி சிலைகளை வெளியே எடுத்தனர். தகவலறிந்து கிராம நிர்வாக அலுவலர் வளர்மதி, கிராம உதவியாளர் பரந்தாமன் ஆகியோர் 3 சிலைகளையும் மீட்டு வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 3 சிலைகளும் ஆங்காங்கே சிதிலமடைந்து உள்ளது. இது பழங்கால சிலைகளாக இருக்கலாம்” என்றனர்.