ரஜினியுடன் இணைந்து நடிப்பேன்: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது:உங்களிடம் நன்றியைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. ‘விக்ரம்’ என்ற குழந்தையை ஜாக்கிரதையாக சேர்க்க வேண்டிய மடியில் கொண்டு போய் சேர்த்துவிட்டீர்கள். பாராட்டுகளுக்கு தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். வெற்றி கிடைத்தது போதும் என்று ஒருபோதும் இருந்ததில்லை. ஒரு காலத்தில் ஷோலே, குர்பானி போன்ற படங்களை நாம் கொண்டாடிக் கொண்டிருந்தோம். இப்போது நமது தென்னிந்திய படங்களை அவர்கள் கொண்டாடுகிறார்கள். இது நல்ல முன்னேற்றம். என்னைப் பொறுத்தவரையில், இந்தியப் படங்கள் வெற்றிபெறுவதுதான் மிகவும் முக்கியம். ரஜினியுடன் இணைந்து நடிக்க எப்போதும் நான் தயாராக இருக்கிறேன். நல்லதொரு கதை அமைந்தால் நான், ரஜினி, லோகேஷ் கனகராஜ்  இணைந்து பணியாற்று வோம். மருதநாயகம், மர்மயோகி, சபாஷ் நாயுடு போன்ற படங்கள் நின்றதில் எனக்கு வருத்தம். அந்த படங்களை இப்போது உருவாக்கலாமே என்கிறீர்கள். ஆனால், காலம் கடந்து விட்டதாக நினைக்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். ‘விக்ரம்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, ‘விக்ரம் பட வெற்றி சந்தோஷத்தையும் கடந்து ஒருவிதமான பயத்தைக் கொடுத்துள்ளது’ என்றார்.

Related Stories: