சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. போலி நகைகளை வைத்து முறைகேடாக நகைக்கடன் பெற்றிருப்பதும் இதன் மூலம் அடையாளம் காணப்பட்டது. ஆய்வு முடிந்த பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 14 லட்சத்து 51 ஆயிரத்து 42 பயனாளிகளுக்கு சுமார் 5,296 கோடி ரூபாய் அளவிற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைகள் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவு வங்கிகள் சார்பாக தெரிவிக்கப்பட்டது.