சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. புள்ளி மான்கள் வனத்தை விட்டு வெளியேறி அவ்வப்போது அருகே உள்ள கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் நுழைவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று காலை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கரசம்பாளையம் அருகே புள்ளிமான் சாலையை கடந்தபோது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.