திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் திருவள்ளூரில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவராக சுரேஷ், மாவட்ட செயலாளராக ஜீவா, பொருளாளராக கமலக்கண்ணன் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 4 துணைத்தலைவர்கள், 4 துணை இணை செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் இருவர், தணிக்கையாளர் ஒருவர், செயற்குழு உறுப்பினர்கள் 4 பேர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கோட்டத்துக்கான தேர்தலில் பொன்னேரி கோட்ட தலைவர் சந்திரன், திருவள்ளூர் கோட்ட தலைவராக தர், திருத்தணி கோட்ட தலைவராக தெய்வசிகாமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகளாக தேர்வு செய்த அனைவருக்கும் நிறுவன தலைவர் சா.அருணன் சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார்.