டெல்லி: இஸ்லாமத்துக்கு விரோதமாக பாஜக நிர்வாகிகள் பேசியதை வெளிநாடுகள் கண்டித்ததால் அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உள்நாட்டு விமர்சனங்கள் இரண்டு செய்தி தொடர்பாளர்களுக்கும் எதிராக செயல்பட பாஜகவை தூண்டவில்லை. சர்வதேசப் பின்னடைவுதான் பாஜகவை நடவடிக்கை எடுக்கத் தள்ளியது என்று கூறியுள்ளார். இஸ்லாமியத் விரோதக் கருத்தை முதலில் விதைத்தவர்கள் நுபுர் சர்மாவோ, நவீன்குமாரோ அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளார். நுபுர் சர்மாவும், நவீன்குமாரும் இஸ்லாமோஃபோபியாவின் அசல் படைப்பாளிகள் அல்ல; அவர்கள் தங்கள் எஜமானர்களை விட கூடுதல் விசுவாசத்தை காட்ட முயன்றுள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.