இந்தியா முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும்; மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம்

டெல்லி: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷன் அவர்கள், கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்தது.

 தற்போது சில மாநிலங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷன் அவர்கள், கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு  கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Stories: