கொரோனா தொற்றில் இருந்து சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடி வந்த நிலையில் நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

பின்னர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது சோனியா காந்தி குணமடைந்து வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தொற்று முற்று பெறாததால் பொது வாழ்வில் உள்ள அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: