தாம்பரம் மாநகராட்சி மண்டலக்குழு கூட்டம்: திமுக உறுப்பினர்கள் புறக்கணிப்பு

தாம்பரம் : தாம்பரம் மாநகராட்சியின் 3வது மண்டல குழு கூட்டம் செம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 14 மாமன்ற உறுப்பினர்களில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, கிரிஜா சந்திரன், அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் சுபாஷினி, திமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் ஜெகன் ஆகியோர் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தை 6 திமுக மாமன்ற உறுப்பினர்கள், திமுகவில் சீட்டு கிடைக்காததால் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்று திமுகவிற்கு ஆதரவாக இருக்கும் 2 மாமன்ற உறுப்பினர்கள், ஒரு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் என 9 பேர் கூட்டத்தை புறக்கணித்து கூட்டத்திற்கு வரவில்லை. இருப்பினும், மண்டலக்குழு தலைவருடன் சேர்த்து 5 பேர் கலந்துகொண்டதை பெரும்பான்மையாக வைத்து சாலை பராமரிப்பு உட்பட 8 தீர்மானங்கள் மண்டல குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக மண்டல குழு தலைவர் தெரிவித்தார்.

Related Stories: