தாம்பரம் : தாம்பரம் மாநகராட்சியின் 3வது மண்டல குழு கூட்டம் செம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 14 மாமன்ற உறுப்பினர்களில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, கிரிஜா சந்திரன், அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் சுபாஷினி, திமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் ஜெகன் ஆகியோர் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டனர்.