திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்பி தலைமையிலான ேபாலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 6,000 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர். 2 பேரை கைது செய்தனர்.திருப்பத்தூர் எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், தமிழக- ஆந்திர எல்லை பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சாராய வேட்டை நடத்தினர். அப்போது, மலைப்பகுதிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் 6,000 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்கள், 500 லிட்டர் சாராயம், கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபாட்டில்கள் ஆகியவற்றை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.