தஞ்சை: தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஏப்ரல் 11ம் தேதி இரவு பணியை முடித்து விட்டு, ஊருக்கு செல்ல பஸ்சிற்காக புதிய பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார். அப்போது அந்த பெண்ணுடன் பள்ளியில் ஒன்றாக படித்த குருங்குளம் மேற்கு மேட்டுப்பட்டியை சேர்ந்த கொடியரசன்(22), என்பவர் அந்த பெண்ணை வீட்டில் விடுவதாக டூவீலரில் அழைத்துச் வந்து முந்திரி தோப்பிற்குள் தூக்கி சென்று, நண்பர்கள் மேட்டுப்பட்டி சாமிநாதன்(30), சுகுமாறன்(23), கண்ணன்(31) ஆகியோருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தார். இந்த வழக்கில் தொடர்புடைய கொடியரசன் உட்பட 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.