செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் ஒன்றியம், நல்லாத்தூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டும் என எம்பி செல்வம், கலெக்டர் ராகுல்நாத் ஆகியோரிடம் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை மனு அளித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகா நல்லாத்தூர் ஊராட்சி நல்லாத்தூர் கிராமத்தில், சிமென்ட் சாலைகள் சிதிலமடைந்து உள்ளன. இந்த தெருக்களில் புதிய சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா சிவா, எம்பி செல்வம், கலெக்டர் ராகுல்நாத் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தார்.அதில், திருக்குழுக்குன்றம் ஒன்றியம் நல்லாத்தூர் ஊராட்சியில் பனங்காட்டுச்சேரி, கொந்தகாரிகுப்பம், பொம்மராஜபுரம், நல்லாத்தூர் கிராமங்களில் இருளர் பகுதி உள்ளன. இங்கு சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஊராட்சியில் உள்ள தெருக்களுக்கு சிமென்ட் சாலை, மழைநீர் கால்வாய், கல்வெட்டு, நல்லாத்தூர் காலனியில் இருந்து ரேஷன் கடை வரை தார்சாலை, குடிநீர் பிரச்னையை தீர்க்க பைப்லைன் வசதி ஏற்படுத்த வேண்டும்.