மதுராந்தகம்: சென்னை தாம்பரம், காஞ்சிபுரம் உள்பட பல பகுதிகளில் இருந்து 43 பேர் ஒரு ஆம்னி பஸ் மூலம் தென் மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் பஸ், மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்தது. பஸ்சை, செங்கல்பட்டு மாவட்டம் கொட்டைமேடு கிராமத்தை சேர்ந்த டிரைவர் கமலநாதன் (48) ஓட்டினார். மேலவலம்பேட்டையில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிக்கெட்டு ஓடி, சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி, அருகில் உள்ள பாலத்தின் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் அனைவரும் அலறி கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்து, அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.