நாளிதழ்களில் பணியாற்றிய கார்த்திக் மாதவன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தி ஹிந்து நாளிதழ்களில் பணியாற்றிய கார்த்திக் மாதவன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஊடகத்துறையில் 19 ஆண்டுகாலம் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிக்கல் மற்றும் தி ஹிந்து நாளிதழ்களில் பணியாற்றிய திரு.  கார்த்திக் மாதவன் அவர்கள் நேற்று (29.5.2022) இரவு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

திரு.கார்த்திக் மாதவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் சிறப்பு நேர்வாக, திரு. கார்த்திக் மாதவன் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: