டெல்லி: இந்திய அரசியல் கலாச்சாரம் 8 ஆண்டுகளில் மாறியுள்ளது என்று பாஜக தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பதவியேற்று இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அவர் கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் முதன்முறையாக பதவியேற்றார். காங்கிரஸை தவிர்த்த வேறு கட்சி ஒன்று மத்தியில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது அதுவே முதன்முறை. அதேபோல முதன்முறையாகக் காங்கிரஸ் பலத்த அடியையும் சந்தித்தது. தனது முதல் பதவிக் காலத்தில், மேக் இன் இந்தியா மற்றும் ஸ்வச் பாரத் என்ற பெரும் திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.