சென்னை: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 102 டன் போதைபொருட்கள் பறிமுதல் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் குட்கா இருக்கக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போதே பேரவையில் சுட்டிக்காட்டியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதைபொருள் இருக்க கூடாது என்பது முதல்வரின் எண்ணம் என மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.