ஆவடி ரயில்வே ஸ்டேஷன் அருகே சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க கோரிக்கை

ஆவடி: ஆவடி ரயில் நிலையத்துக்கு செல்லும் ஸ்டேஷன் சாலையில் 6 தனியார் பார்க்கிங் மற்றும் ஒரு ரயில்வே பார்க்கிங் வசதி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேர் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, ரயில்கள் மூலம் பல்வேறு இடங்களில் வேலைக்கு சென்று வருகின்றனர். இதில் சிலர் பார்க்கிங் பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்தாமல், ஸ்டேஷன் சாலையோர பகுதிகளில் வரிசையாக நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதனால் ஸ்டேஷன் சாலையில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு போக்குவரத்து காவலர்கள் பணியில் இருந்தபோதும் கண்டுகொள்வதில்லை. இங்கு நாள்தோறும் நான்கைந்து இருசக்கர வாகனங்கள் திருடுபோகின்றன. இப்புகார்களின்பேரில் போலீசார் விசாரித்தும், சாலையோர வாகனங்களை அகற்ற முன்வருவதில்லை. எனவே, ஸ்டேஷன் சாலையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை அகற்றி, அங்கு போக்குவரத்து காவலர்களை வைத்து எச்சரித்தும், அந்த சாலையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: