சென்னை: சென்னையில் பிரதமரை வரவேற்க பாஜகவினர் பலூன்களை பறக்கவிடும் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் பாஜக சார்பில் ஒரு லட்சம் பலூன்கள் பறக்கவிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டதால் பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சியை பாஜகவினர் ரத்து செய்தனர்.