கொல்கத்தா: இன்றைய போட்டி மழையின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்பு மைதானம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு போட்டி தொடங்குவதறடகான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களுரு அணி களமிறங்க உள்ளது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதுகின்றன. புது அணியான கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வி என 18 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்குள் வந்தது. பேட்டிங்கில் டி காக் 502, ராகுல் 537, தீபக் ஹூடா 406 ரன் எடுத்து சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் அவேஷ்கான், மொசின் கான், ரவி பிஷ்னோய், ஹோல்டர்வலு சேர்க்கின்றனர்.