தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் அசூர் தான்தோன்றிஸ்வரர் கோயிலில் 10ம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட சோழகாலக் கல்வெட்டும், 14ம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட பாண்டியர் காலக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.இக்கல்வெட்டுக் குறித்து சரஸ்வதி மகால் நூலக நூல் விற்பனைப்பிரிவு எழுத்தர் நேரு அளித்த தகவலின்படியும் ஆசூரைச் சார்ந்த ரவி, கருப்பையன், ராமச்சந்திரன், கவுதமன் ஆகியோரின் உதவியுடன் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கண்ணதாசன், பொந்தியாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தில்லைகோவிந்தராஜன், அம்மாபேட்டை உக்கடை அப்பாவு தேவர் மேனிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வரலாறு) சின்னையன், சரபோஜி கல்லூரி முன்னாள் முதுகலை மாணவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட குழுவினர் இக்கோயில் கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.
முதல் கல்வெட்டு பத்தாம் நூற்றாண்டு எழுத்தமைதியுடனும் சொற்கள் இரண்டிரண்டாக கொண்ட ஐந்து வரிகளில் உள்ளன. இவை நிலம், காவிதி, புத்தூர், அறுநாழி, சோழன் என்னும் சொற்கள் மட்டுமே வாசிக்கும் நிலையில் காணப்படுகின்றன.